மனைவி - டாக்டர் எனக்கு பல்லு வலிக்குது கொஞ்சம் என்னனு பாருங்க டாக்டர் - உனக்கு பல்லுல ஓட்ட இருக்குமா அத அடைக்கணும் கணவன் - அப்படியே பல்லு ஓட்டையும் சேத்து அவளோட வாயையும் அடைங்க அவளோட தொல்ல தாங்க முடியல
ஆள் 1 - டேய் எங்க ஊருல மின்சாரம் தாக்கி ரெண்டு பேரு பலி ஆள் 2 - டேய் உங்க ஊருல பரவாலடா எங்க ஊருல சம்சாரம் தாக்கி நாலு பேரு பலி.
மனைவி - ஏங்க நம்ம செத்துட்டா சொர்கத்துல ஒன்னா இருக்க முடியாதாம்ல? கணவன் - ஆமா. அதனால தான் அதுக்கு பேரு சொர்க்கம்.
(கணவன் இறக்கும் நிலையில் இருக்கான்) மனைவி - நீங்க இறந்து போனா நானும் உங்களோட சேர்ந்து வந்துடுவேன் கணவன் - ஜோசியக்காரன் அப்பவே சொன்னான் நீ செத்தாலும் சனியன் உன்ன சும்மா விடாதுடா.
(கணவன் இறக்கும் நிலையில் இருக்கான்) கணவன் - ஏம்மா நா ஒரு வேல இறந்துட்டா நீ எழுத்த வீடு குமாரதான் கல்யாணம் கட்டிக்கணும் மனைவி - ஏங்க அவன் உங்களோட பரம எதிரிடா கணவன் - ஆமா. இதவிட அவன பழி வாங்க எனக்கு இப்ப வேற வழி இல்ல.
கணவன் - ஏம்மா ஒரு கப் காபி மனைவி - என்னடா கேட்ட? கணவன் - போடவான்னு கேட்டேன்.
ஆள் 1 - என்னோட மனைவி எல்லாம் கோவம் வந்தா பத்தரகாளியா மாறிடுவா ஆள் 2 - அப்ப நீங்க? ஆள் 1 - நா காலியா ஆயிடுவேன்.
நண்பன் 1 - என்னோட மனைவி என்ன சத்தம் வராம அடிப்பா. ரொம்ப நல்லவ நண்பன் 2 - என்னோட மனைவி என்ன ரத்தம் வராம அடிப்பா
பேச்சாளர் - நேத்தி நா பேசுனத கேட்டுகிட்டு மக்கள் எல்லாரும் மூக்கு மேல விரல வச்சாங்க. மனைவி - நா உன்ன பல்ல விலகிட்டு போயா பல்ல விளகிட்டி போயானு எத்தன தடவ சொனேன் கேட்டியா?
கணவன் - ஏண்டி சாப்பாடா சமைச்சி வச்சிருக்க?. இவுளோ கல்லு கிடக்கு பத்து விரல் இருக்குள்ள அத எடுத்து போட்டா என்ன? மனைவி - முப்பத்தி ரெண்டு பல்லு இருக்குள்ள அத கடிச்சி தின்னா என்ன?